டில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி: திருவாரூரில் பொதுக்கூட்டம், பேரணி

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-30 03:03 GMT

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில்  போராடி வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பாராட்டு பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தெற்கு வீதியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை வரை பேரணி வந்தடைந்தது.

இந்த பேரணியை வரவேற்பு குழு தலைவர் சேரன் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் ஐவர் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த அசோக் தாவ்லே பங்கேற்று  பேசினார். இந்தக் கூட்டத்தில் திருதுறைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் கெளரவ தலைவர் தியாகபாரி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News