திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-02 04:56 GMT
தியாகராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நடந்தது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News