வாலிபருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவாரூர் மகிளா கோர்ட் அதிரடி

திருவாரூரில், பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 32 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-07-20 06:00 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரவிந்த் (வயது-22). இவர் 06-11-2019 அன்று 14-வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் அரவிந்த் என்பவருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25-ஆயிரம் அபராதமும் விதித்து விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி.சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார்.இதனைத் தொடர்ந்து அரவிந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News