திருவாரூரில் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் அஞ்சுகம் அம்மையாருக்கு மரியாதை

திருவாரூரில் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2021-05-08 14:15 GMT

சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவாரூர் திமுக நகர கழக அலுவலகம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும்,

நகர கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவர் கலைஞர் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருவாரூர் நகர கழக செயலாளர் வாரை. எஸ். பிரகாஷ் , திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் புலிவலம் A. தேவா, கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சேகர் (எ) R.கலியபெருமாள்,

மாவட்ட பொருளாளர் வெங்கடேசன்,மன்னார்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் I.V.குமரேசன், கூத்தாநல்லூர் நகர கழக செயலாளர் காதல் உசேன், திருவாரூர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜ் (எ) G.கருணாநிதி, குடவாசல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.பிரபாகரன்,கூத்தாநல்லூர் நகர செயலாளர் காதர் உசைன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News