திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார் நிறுவனம் வழங்கல்

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10ஆ்க்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தனியார் நிறுவனம் வழங்கியது.

Update: 2021-05-22 10:45 GMT

திருவாரரூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிதி நிறுவனம் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கியது.

திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்காக தனியார் நிதி நிறுவனம் சார்பாக 10 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கப்பட்டது . கொரோனா தொற்று இரண்டாம் அலை தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மட்டுமன்றி பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் தொற்றால் பாதிப்போருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இன்றைய தினம் திருவாரூரில் இயங்கிவரும் நாராயணி நிதி லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தின் சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் அரசு மருத்துவமனை கல்லூரிக்குபயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலர்ள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News