இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் திருவாரூர் தி.மு.க .வேட்பாளர்கள்
இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் திருவாரூர் தி.மு.க. வேட்பாளர்கள் வீடுவீடாக வாக்கு சேகரித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. பிரச்சாரம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட 11வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அகிலா வாசன் நகர், வடக்கு வடம்பொக்கி தெரு, மருதபாடி, முடுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து 12 வார்டில் போட்டியிடும் நகர செயலாளர் பிரகாஷ் தனது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.