திருவாரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அலுவலர்கள் தலைமையில் நடக்கும் மக்கள் நேர்காணல் முகாம் ஆகியவை அரசின் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுக்கப்படுகிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.