திருவாரூர் மாவட்டத்தில் நாளை 414 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 414 இடங்களில் 40,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-21 14:58 GMT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 414 இடங்களில் 40,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு 19ம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி தகுதியேற்பு நாள் கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 9 மாதங்கள் /39 வாரம் கடந்தவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி எளிதில் அணுக கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயும், இந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 19ம் கட்டமாக நாளை திருவாரூர் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் 258 இடங்களிலும், நகராட்சிகளில் 41 இடங்களிலும், பேரூராட்சிகளில் 15 இடங்களிலும், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நடமாடும் கொரோனா தடுப்பூசிகுழு 40 என மொத்தம் 414 இடங்களில் 40,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது  என கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News