திருவாரூர் மாவட்டத்தின் கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன் பதவியேற்பு
திருவாரூர் மாவட்டத்தின் கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன் பதவியேற்றார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சாந்தா மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக கேரளாவை பூர்வீகமாக கொண்ட காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை காயத்ரி கிருஷ்ணன் ஐஏஎஸ் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களிடம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.