திருவாரூர்... டீ குடித்து விட்டு வருவதற்குள் திருட்டு- வைரல் ஆன வீடியோ
திருவாரூரில் டீ குடித்து விட்டு வருவதற்குள் மின் மோட்டார் திருடும் சி.சி.டி.வி. வீடியோ வெளியானது பரபரப்பாகி உள்ளது.
திருவாரூர் பேபி டாக்கிஸ் சாலையில் அடிக்கடி கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஆளில்லாத நேரத்தில் சாதாரணமாக மின்விசிறி மற்றும் மோட்டாரை திருடிச் செல்லும் சி.சி.டி.வி .வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடையின் உரிமையாளர் டீ கடைக்கு சென்று டீ அருந்தி விட்டு திரும்புவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
சமூக வலைத்தலங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ பதிவுகள் தொடர்பாக திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.