திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-10 12:15 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள். 

திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் (சிஐடியு) தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சுழற்சி முறையில் உழியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும், டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மதுக்கூடங்களின் உரிமையாகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.   மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News