ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்

திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 3 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ரோட்டரிகிளப் ஆப் கிங்ஸ் சார்பாக வழங்கல்

Update: 2022-02-01 11:00 GMT

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டி

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் 3 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிதளை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் பூண்டி கலைவாணன் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் பயன்பாட்டிற்காக வழங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும்,உடன் வந்திருப்பவர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் முன்னாள் ஆளுநர் பாலாஜி பாபு , தலைவர் கருணாநிதி, செயலாளர் ருத்ராபதி, பொருளாளர் மாரிமுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ், திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News