உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

திருவாரூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-23 06:26 GMT

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

திருவாரூர் காணூர் பகுதியில் உள்ள மாவட்ட சோதனைசாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் .அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் 305 நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முயன்றதையடுத்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வட்டாட்சியர் கடத்த முயன்ற லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் பகுதியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் 182 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசு நெல் மூட்டைகள் ஏற்றி செல்ல அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளது. நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஒரேநாளில் திருவாரூர் வட்டாட்சியர் 484 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News