திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
திருவாரூர் மாவட்டத்தில் 142 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தமுள்ள 220 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் 142 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தமுள்ள 220 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர். அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பள்ளியின் வாசலிலேயே தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னரே மாணவர்கள் பள்ளிகளுக்கு உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
தொடர்ந்து வகுப்பறைகளில் ஒரு மேஜைக்கு இரண்டு மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.