சிறுமியை மீட்டு தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை மனு அளிப்பு

திருவாரூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-02-08 12:20 GMT

சிறுமியைக்காணவில்லையென திருவாரூர் மாவட்ட எஸ்பி.யிடம் புகார் மனு அளிக்க வந்த உறவினர்கள்

திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த  17 வயது சிறுமி தந்தை,தாய் இழந்ததன் காரணமாக தனது தாத்தா  ராமமூர்த்தி மற்றும் பாட்டி லட்சுமி  ஆகியோருடன் வசித்து வருகிறார். .தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் மாலையில் விடுதிக்கு  திரும்பவில்லையாம்.

இதுகுறித்து தகவலறிந்த ராமமூர்த்தி குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் தேதி புகார் அளித்துள்ளனர். சிறுமி பயின்ற கல்லூரியில் கும்பகோணத்திலுள்ள ஹோட்டலுக்கு பயிற்சிக்காக அனுப்புவது வழக்கம். சிறுமி மாயமான அன்றைய தேதி முதல் ஹோட்டலில் பணிபுரிந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனும் மாயமாகியுள்ளார். இச்சம்பவம் சிறுமி காணாமல் போனதற்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தை சிறுமியின் குடும்பத்தினர் புகாரில்  குறிப்பிட்டுள்ளனர்.

தற்பொழுது புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு தகவலும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படாத நிலையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க குடும்பத்தினர் வந்தனர்  தங்கள் பேத்தியை கண்டுபிடித்து தருமாறு சிறுமியின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News