திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
திருவாரூரில் நடந்த வாகன சோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் விளமல் கூட்டுறவு நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போது,புதுச்சேரி மது பாட்டில்கள் சிக்கின.
மொத்தம் 37 பாட்டில் மதுபானங்கள் திருவாரூர் மது விலக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மது கடத்தி வந்த திருப்புகளூர் மகேந்திரன் , திருமருகல் முருகானந்தம் - ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.