திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பணி ஆணையை வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 52க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வரிசையில் நின்று பங்கேற்றனர். இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று தனியார் நிறுவனத்தின் பணி ஆணையை நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.
இந்த முகாமில் பங்கேற்றவர்களை கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.