திருவாரூர் அருகே அஞ்சல் பெண் ஊழியர் சாலைவித்தில் பலி, உறவினர்கள் சந்தேகம்

திருவாரூர் அருகே அஞ்சல் பெண் ஊழிய் சாலை விபத்தில் இறந்தார். இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2021-05-23 17:30 GMT

திருவாரூர் அடுத்த தப்பளாம்புலியூர் கிராமத்தில் சாலை விபத்தில் அஞ்சல் பெண் ஊழியர்  இறந்தார். ,திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொன்றதாக போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்..

திருவாரூர் அடுத்த கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் இவரது மகள் ஜெயபாரதிக்கும்,கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்று விட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறத்துள்ளது.

இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும் ,குழந்தையையும் திருவாரூரில் உள்ள பொற்றோர்வீட்டிற்கே அனுப்பிவிட்டார் விஷ்ணு பிரகாஷ் .

பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்துவைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும் பலனில்லாத்தால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும்,முதலமைச்சர் தனி பிரிவுக்கும்,சமூக நலத்துறைக்கும் புகார் அளித்தும் பலன் இல்லாததால் 50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த பிரச்சனையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும் ,உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ்,மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும்,அவரது பெற்றோரையும் போனில் திட்டுயும் மிரட்டியும் உள்ளனர்.

இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் ஜெபாரதி பணி முடித்துக்கொண்டு தனதுவீட்டிற்குவரும் போது வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு கார் விபத்தில் இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே ஜெயபாரதியின் விபத்து சாவில் மர்மம் இருப்பதாகவும் ,இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதியை கொலை செய்யப்பட்டுள்ளதாக உரிய விசாரணை நடத்தவேண்டும்.  அப்போதுதான் உடலை வாங்குவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்து புகார் அளித்தனர் .


Tags:    

Similar News