திருவாரூர்: பூண்டி கலைசெல்வத்தின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மறைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி செல்வத்தின் 14-வது நினைவு தினத்தையொட்டி மௌன ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-11-17 09:33 GMT

பூண்டி கலைச்செல்வம் நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மறைந்த தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம் 14வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி .கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்திலிருந்து மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மறைந்த மாவட்ட செயலாளர் பூண்டி செல்வம் இல்லம் வரை சென்று நிறைவடைந்தது.


Tags:    

Similar News