திருவாரூர் பெந்தகோஸ்தே திருச்சபை சார்பில் ரத்ததான முகாம்

திருவாரூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெந்தகோஸ்தே திருச்சபை சார்பில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

Update: 2021-12-19 11:43 GMT
திருவாரூரில்  பெந்தகோஸ்தே சபை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விழாவான கிறிஸ்துமஸ் பண்டிகை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பயனுள்ளதாக கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்ட பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் சார்பில் ரத்த தான முகாம் நிகழ்ச்சி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் பெந்தகொஸ்தே திருச்சபை மாமன்ற இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட பெந்தகொஸ்தே பேராயத்தின் மாவட்ட தலைவர் நத்தானியேல், மாவட்ட செயலாளர் மைக்கேல் தாஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரீதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News