திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம் பாதிப்பு

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் கசிந்து பரவியது.

Update: 2022-02-17 13:01 GMT

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் கசிந்து பரவியது.

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப்பகுதியைச் சுற்றி ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் குழாய்கள் மூலம் விளைநிலங்கள் வழியாக குடும்பனார் கோயிலிலிருந்து வேளுக்குடி கிராமம் வரை எடுத்து செல்லப்படுகிறது.

இந்நிலையில் விவசாயி நடராஜன் என்பவர் நிலத்தின் வழியாக செல்லும் குழாய் இன்று உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் கசிந்து பரவியது. இதனால் அதில் பயிரிடப்பட்டிருந்த பச்சை பயிர் மற்றும் உளுந்து பயிர்கள் சேதமாகின. இதுகுறித்து ஓஎன்ஜிசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு சென்று சேதமடைந்த விளைநிலத்தை பார்வையிட்டனர். அப்போது அந்தக் குழாய் ஓஎன்ஜிசிக்கு சொந்தமானது அல்ல என்பது தெரியவந்தது. மேலும் அந்த எண்ணெயின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து வட்டாட்சியர் நடராஜனின் நிலத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக விவசாயி கூறுகையில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் வகைகள் அனைத்தும் சேதமாகி சேதமாகி உள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News