திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-17 08:30 GMT

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் , சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதனை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால்தீன் தலைமயில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர்.

Tags:    

Similar News