மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு வைப்பதை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-08 00:30 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர். 

மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டப்படிப்பு சேர்வதற்கு மத்திய அரசு தற்போது பொது நுழைவுத்தேர்வு கட்டாயப்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது... திருவாரூர் மாவட்டம் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News