திருவாரூர் திருக்காரவாசலில் பணப்பந்தல் அமைத்து மஹா சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரியையொட்டி திருக்காரவாசலில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு பந்தல் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-03-02 08:44 GMT

ரூபாய் நோட்டுக்களால் அமைக்கப்பட்ட பணப்பந்தல்.

சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் சன்னதியில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு பந்தல் அமைத்து சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது.


மேலும் கோவிலில் 10008 விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் முழுவதும் ஜெக ஜோதியாக காட்சியளித்தது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News