திருவாரூர்: கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2021-12-03 03:06 GMT
கலா உச்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பள்ளிகளுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தனர்.

மத்திய அரசின்  மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கமும் இணைந்து 2021-2022ம் ஆண்டிற்கான மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டி கடந்த நவம்பர் 16,17, மற்றும் 18ம் தேதிகளில் சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு மன்னார்குடி, சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி அமிர்தவர்ஷினி தவில் இசையில் மாநில அளவில் முதலிடமும், திருத்துறைப்பூண்டி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி தொல்காப்பியா பரதநாட்டிய கலையில் மாநில அளவில் முதலிடமும் பெற்று விருதினை பெற்றுள்ளனர்.

இவ்விருதினை பெற்ற மாணவிகளை மாவட்ட ஆட்சியர்காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர்  பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். மேன்மேலும், பல்வேறு சாதனைகளை படைக்குமாறு விருது பெற்ற மாணவிகளை வாழ்த்தினார்கள்.  

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் திருவாரூர் பார்த்தசாரதி, மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News