திருவாரூர்: வீட்டுமனை மோசடி தொடர்பாக கலெக்டரிடம் புகார்

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-09-21 06:49 GMT

வீட்டுமனை  மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கிவரும் ஏ1 புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம் மாதத்தவணையின் பெயரில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வந்துள்ளது .கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்த  நிறுவனம் திருவாரூரை அடுத்த மாங்குடி அருகே கீழ மணலியில் வீட்டுமனை தருவதாக அறிவித்திருந்தது.

இதை நம்பி 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 40க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி முடித்துள்ள நிலையில், இதுவரை வீட்டுமனை தரவில்லை எனவும் வீட்டுமனை தர இயலாவிட்டால் பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும் அதற்கான பதிலும் அளிக்காத நிலையில் இன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட  கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வீட்டு மனையை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கட்டிய பணத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News