திருவாரூரில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூரில் நேற்று இரவு கடும் பனிப்பொழிவு இருந்தது அது தொடர்ந்து காலை 8 மணிவரை நீடித்தது

Update: 2022-02-22 03:00 GMT
திருவாரூரில் ஏற்பட்ட பனிப்பொழிவால் சூழப்பட்டுள்ள சாலை

திருவாரூரில் நேற்று இரவு கடும் பனிப்பொழிவு இருந்தது அது தொடர்ந்து காலை 8 மணிவரை நீடித்தது. சாலைகள் தோறும் புகை போன்று பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொரடாச்சேரி, புலிவலம் ,அலிவலம், கிடாரங்கொண்டான் ,சேந்தமங்கலம், விளமல் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

Tags:    

Similar News