கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் சராசரியாக 4.6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதனையடுத்து தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .