கனமழை எச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு.

Update: 2021-11-26 10:54 GMT

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நாளை தினமும் திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News