வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது

குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-24 14:54 GMT
கைது செய்யப்பட்ட முகமது யூசுப்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த பக்கிரி முகமது மகன் முகமது யூசுப் (37). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர் வழக்குகளில் இருந்து தப்பிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் துறையினர், முகமது யூசுப் தொடர்பாக சர்வதேச விமான நிலையங்களில் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் முகமது யூசுப் கத்தார் நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையம் வருவதாக, விமான நிலைய அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விமான நிலைய போலீசார் திருச்சியில் இறங்கிய முகமது யூசுப்யை கைது செய்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முகமது யூசுப்பை கைது செய்தனர்.

Tags:    

Similar News