மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

திருவாரூர் அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Update: 2022-02-25 15:17 GMT

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவாரூர் அருகே நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருவாரூர் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற  முகாமில் கீரங்கோட்டகம் , தேவர்கண்டநல்லூர் , குளிக்கரை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்றனர்.

மேலும் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் கண் அறுவை சிகிச்சைக்காக 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவாரூர் லயன்ஸ் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் கிங்ஸ் ரோட்டரி சங்கம் தலைவர் கருணாநிதி, உதவி ஆளுநர் ராமதுரை, செயலாளர் உத்திராபதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News