குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திருவாரூர் 12வது வார்டு திமுக வேட்பாளர் வாரை.பிரகாஷ் சாலைகளில் இருந்த குப்பைகளை அள்ளி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2022-02-10 12:26 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை வாரை. பிரகாஷ் தனது வார்டு பகுதிகளான அய்யனார் கோவில் தெரு, அப்பா பிள்ளை தெரு, துர்வாசர் சன்னதி தெரு ,உடையார் தெரு பகுதிகளில் சாலை ஓரம் குமிந்திருந்த குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதேபோல் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாலமுருகன் ஹவுசிங் யூனிட் குடியிருப்பு ராமநாதன் நகர் ஆவணி வீதி பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நகர் பகுதிக்குட்பட்ட அடிப்படை தேவைகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார் அப்போது திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News