அரசு ஆரம்பசுகாதாரநிலையங்களுக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டது

Update: 2021-08-26 09:00 GMT

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆரம்பசுகாதாரநிலையங்களுக்கு ஆக்சிஜன்செரிவூட்டிகளை வழங்குகிறார் கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி திருவாரூர் மாவட்ட கிளை சார்பாக தமிழ்நாடு மாநில கிளையிடமிருந்துரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட பெரும்பண்ணையூர், முத்துப்பேட்டை, ஆலங்குடி, அடியக்கமங்கலம், எடையூர் சங்கேந்தி, வடுவூர், திருவிழிமிழலை, உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை, பூந்தோட்டம், ஆலத்தாம்பாடி ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில், சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் ஹேமசந் காந்தி, ரெட்கிராஸ் தலைவர் ராஜகுமார், ரெட்கிராஸ் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News