திருாவாரூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்- கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார்

Update: 2021-09-29 11:35 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையினை உருவாக்கி அதற்கென சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பத்தே தினங்களுக்குள் குறைதீர்ப்பு பணிகள் துவங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார்

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது  தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு செய்திருந்த மாற்றுத்திறனாளி களில் 5 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 600 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர்.புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News