திருவாரூர்: நதிகளை இணைக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்

நதிகளை இணைக்க வலியுறுத்தி தி.மு.க. பிரமுகர் திருவாரூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளார்.

Update: 2021-09-22 12:00 GMT

திருவாரூரில் சைக்கிள் பயணத்தை பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சீவி என்பவர் பல ஆண்டுகளாக தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இவர் இன்று திருவாரூரில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தின் முன்பிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

கருணாநிதி புகழை இந்தியா முழுவதும் பரப்பும் நோக்கத்துடனும், இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தியும் அவர் தொடங்கி உள்ள இந்த சைக்கிள்  பயணத்தை திருவாரூர்  மாவட்ட தி.மு.க.செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் துவக்கிவைத்தார்.

இந்த சைக்கிள்பயணமானது திருவாரூரிலிருந்து புறப்பட்டு திருக்குவளை சென்று கருணாநிதி இல்லத்தில் மரியாதை செலுத்திவிட்டு நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம் வழியாக இந்தியா முழுவதும் செல்லும் என  சஞ்சீவி  கூறினார்.

Tags:    

Similar News