திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

கொரோனா தொற்று பரவலை குறைக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

Update: 2022-01-09 04:44 GMT

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பால், மருந்தகங்கள் ,ஏடிஎம் சேவை உள்ளிட்டவை தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News