கொரோனா விதிமுறையை பின்பற்றாத கிளினிக் மூடல்

திருவாரூர் நகர்ப்பகுதியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த தனியார் கிளினிக்கை நகராட்சி அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர்..

Update: 2021-05-19 10:45 GMT

''திருவாரூர் நகரின் துர்காலயா சாலையில் இயங்கிவரும் பிரபல தனியார் கிளினிக்கில் அளவுக்கு அதிகமான நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் இந்த கிளினிக்கை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சிகிச்சைக்காக கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பெயரில் மருத்துவமனை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

Tags:    

Similar News