திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு

திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-09 01:48 GMT

எமதர்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூர் தெற்குவீதி நகராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகில் கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி, முககவசம் போட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கிருமிநாசினி மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. காவல்துறை சார்பில் துப்புரவு பணியாளர்களை மலர்தூவி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிங்ஸ் சங்கத் தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமையிலும், ரோட்டரி மண்டலம் 11 - ன் உதவி ஆளுநர் ராமதுரை,திருவாரூர் நகராட்சி சுகாதார அதிகாரி தங்கராமு, கிங்ஸ் சங்க உடனடி முன்னாள் தலைவர் ரஜினிசின்னா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கிங்ஸ் சங்க உறுப்பினர் ஜெயபால், எமதர்மன் வேடமிட்ட நிகழ்வினை திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் தொடங்கி வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News