திருவாரூர் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை

திருவாரூர் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-07 13:25 GMT

ஆர்த்தி

திருவாரூர் அருகே சேமங்கலம் ஊராட்சி திருவநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஆர்த்தி (20). இவர் நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கருப்பூர் கிராமத்தை சேர்ந்த சேதுபதி மகன் சாவித் (24) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் .இந்த நிலையில் ஆர்த்தியும் சாவித்தும்  கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் இவரிடம் சாவித் நகைகள் பெற்று செலவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என ஆர்த்தி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் .நேற்று முன்தினம் திடீரென ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். இதில் அவர் எலி மருந்து சாப்பிட்டதும் 3 மாத கர்ப்பமாக இருந்ததும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது .இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .இதனை தொடர்ந்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் சாவித்தை தேடி வருகின்றனர்.

ஆர்த்தி காதலன் சாவித்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது ஜாதி பாகுபாடு தெரிவித்து திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும். உடனடியாக  பெண்ணின் இறப்புக்கு காரணமான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என ஆர்த்தி தரப்பில்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News