திருவாரூரில் குடியரசு தினவிழா: ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார்

திருவாரூரில் 73வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

Update: 2022-01-26 04:52 GMT

குடியரசு தினவிழாவில் வெண்புறாக்களை பறக்கவிட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டம் விளையாட்டு அரங்கில் இன்று 73வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 253 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 257 பயணாளிகளுக்கு 32 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News