திருவாரூர் பஸ் நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

தொண்டு நிறுவனங்கள் சார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் திருவாரூர் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.

Update: 2022-04-25 14:09 GMT

திருவாரூர் பஸ்  நிலையத்தில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் மற்றும் புலிவலம், மை மதர் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து இன்றைய தினம் மாலை திருவாரூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் வர்த்தகப் பெருமக்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிங்ஸ் சங்க தலைவர்.ராஜ் (எ) கருணாநிதி தலைமையில், உதவி ஆளுநர் ராமதுரை, திருவாரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் தியாகராஜன் மண்டலச் செயலாளர் கோபி (எ) சொக்கலிங்கம், மை மதர் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கலைச்செல்வி, திருவாரூர் சோழா ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் பா. ரமேஷ் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகவேந்தன் ஆகியோர் பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

Tags:    

Similar News