திருவாரூரில் தியாகத்திருநாள் பெருநாள் தொழுகை கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகையையொட்டி திருவாரூர் வடக்கு மாவட்ட கிளைகளில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2021-07-21 07:30 GMT

திருவாரூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகை 

திருவாரூர் வடக்கு மாவட்ட கிளைகளான கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், திருவாரூர், புலிவலம் கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், தண்ணீர்குண்ணம், லெட்சுமாங்குடி மரக்கடை, குடவாசல், நன்னிலம், வாழ்க்கை கொல்லாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைகளில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

கொடிக்கால்பாளையம் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற தொழுகையில் மாவட்ட தலைவர் முஹம்மது பாசித் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரை ஆற்றினார். அதேபோன்று மாவட்ட செயலாளர் அப்துல் காதர் கூத்தாநல்லூரிலும், அதேபோல் திருவாரூர் நகரத்தில் திருவாரூர் நகர தலைவர் முகமது மீரான் அவர்கள் திருவாரூர் நகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொழுகையிலும் உரையாற்றினர்.  பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News