திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு மாவட்ட நீதி துறை சார்பாக சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2022-04-09 14:43 GMT

 மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்ற சமரச விழிப்புணர்வு பேரணி

சமரச விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை சமரச விழிப்புணர்வு பேரணி மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமரச தீர்வு நாள் மற்றும் தீர்வு வாரம் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஏப்ரல் 6 தேதி முதல் 13-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுவதை ஒட்டி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து வழக்குகளை விரைந்து முடித்து கொள்ளலாம் என இந்த பேரணியை மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பேரணியில் மாவட்ட தலைமை நீதிபதி சாந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், சார்பு நீதிபதி வீரணன், உரிமையியல் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News