அர்ச்சகர் நியமனம் கண்டித்து திருவாரூரில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்
அர்ச்சகர் நியமனம் கண்டித்து திருவாரூரில் இந்து மகாசபா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் அருகே எண்கண் முருகன் ஆலயத்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நான்கு அர்ச்சகர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிலையில் புதிதாக ஒரு அர்ச்சகரை இந்து சமய அறநிலையத்துறை நிரந்தரமாக பணியில் அமர்த்தியுள்ளது .இதனை கண்டித்து இந்து மகா சபா வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்யாமல் புதிதாக ஒருவரை பணியில் அமர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மேலும் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 4 அர்சகர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.