திருவாரூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-17 12:47 GMT

தி.மு.க. அரசை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியினருக்கு கட்டளையிட்டு இருந்தனர்.

இதன்படி  திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க. அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News