நிவாரணம் வழங்கக்கோரி திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி, திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-22 09:19 GMT

திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். 

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி, திமுக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று திருவாரூரில், அதிமுக  மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்வேல், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் சூரிய சாமி, நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News