திருவாரூரில் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கியம்

திருவாரூரில் பா.ஜ.க, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க. வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

Update: 2021-10-24 07:31 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் தங்கணை இணைத்துக்கொண்டனர்.

திருவாரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவாதிரை மங்கலம் பகுதியை சேர்ந்த பா.ஜ.க, அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் தி.மு.க. மாவட்டச் செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு இருவர்ண வேட்டி சேலைகளை வழங்கி தி.மு.க. மாவட்ட செயலாளர் வழங்கி வாழ்த்தி வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, நகர செயலாளர் பிரகாஷ், திருவாதிரைமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் செந்தில், ஒன்றிய பிரதிநிதி வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News