திருவாரூரில் தனியார் நிறுவனத்திற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்

தமிழக முதல்வரின் அனுமதி பெற்று, இந்த ஆண்டு திருவாரூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2021-07-23 16:53 GMT

திருவாரூரில் தனியார் நிறுவனத்திற்கான பணிநியமன ஆணையினை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில்,  தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் பங்கேற்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் முகாம் மூலம் மனு அளித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்திற்கான பணி நியமன ஆணையை  வழங்கினார்.  மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களையும்  வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர்  பேசியபோது:  தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு 100 நாட்களில் நிறைவேற்றித் தருவேன் என முதல்வர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், இதுவரை 50 சதவீத மக்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன .அதன்படி, இன்று வேலைவாய்ப்பு துறை மூலமாக   பணி ஆணை வழங்குகிறோம். விரைவில்,  திறன் மேம்பாட்டுத் துறையின் மூலமாக, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பல லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய நிலையை உருவாக்குவோம். மேலும், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று,  இந்த ஆண்டு திருவாரூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என அமைச்சர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர்.கொ.வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.ஆர்.ஸ்ரீனிவாசன, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன் , மாவட்டஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) .சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் .ப.சிதம்பரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்.பாலசந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சோம.அழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News