திருவாரூரில் சர்வ மத பிரார்த்தனை

Update: 2021-01-30 12:15 GMT

திருவாரூரில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 73 வது நினைவு நாளையொட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சர்வ மத பிரார்த்தனையில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.மகாத்மா காந்தியின் 73 வது நினைவு நாளான இன்று திருவாரூர் சுந்தரவளாகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காந்தியன் அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News