தேனி மாவட்ட பாரதிய சனாதன இயக்கத்தினர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். மாவட்ட தலைவர் வைரமுத்து தலைமையில் அளித்த அந்த மனுவில்,
உலகத்தின் தந்தையாக இந்துக்களின் கடவுளாக போற்றப்படும் இறைவன் சிவபெருமானை, தகாத வார்த்தைகளால் திட்டியும், இந்து மதத்தை கொச்சைப் படுத்தியும் அவதூறாகவும் பேசிய, போலி சாமியார் சிவயோகி சிவக்குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் ஜெயகணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.